#BREAKING தமிழகத்தில் 2ஆவது நாளாக 3,500-ஐ தாண்டி பதிவான கொரோனா பாதிப்பு !
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக நேற்று 3,500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து இன்று 2ஆவது நாளாகவும் அதே அளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்குக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74,622ஆக உயர்ந்துள்ளது.
newstm.in