1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது !

#BREAKING தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது !


சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,939 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,699-ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக நேற்று முன்தினம் 3,500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து இன்று 3ஆவது நாளாகவும் அதே அளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்குக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. 

இதனிடையே தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரேநாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 68 பேரில் 23 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 45 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். 

newstm.in 

Trending News

Latest News

You May Like