1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி.. சாதித்த ரஷ்யா !



உலகையே சுமார் 10 மாதங்களாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுத்து நிறுத்துவதற்காக ரஷ்யாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷ்யா முறைப்படி பதிவு செய்துள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது. இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி.. சாதித்த ரஷ்யா !

இதற்கு மத்தியில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் விநியோகம் தொடங்கி உள்ளது. இதை ரஷ்ய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையொட்டி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் தொகுதி ரஷ்ய பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போடப்படும் என கூறப்பட்டுள்ளது.

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி.. சாதித்த ரஷ்யா !

உலகிலேயே ரஷ்யாவில்தான் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in


 

Trending News

Latest News

You May Like