அதிமுக எம்.எல்.ஏவின் மனைவி, மகளுக்கும் கொரோனா!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்தில் 46,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனா பாதிப்பால் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
எம்எல்ஏ பழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவுகள் அவருடைய மனைவிக்கும், மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
newstm.in