1. Home
  2. தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா மராட்டியம், தமிழ்நாடு, கேரளா,ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. இந்நிலையில், அதிர்ச்சி தரும் விஷயமாக அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றால் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் கே. பாலகிருஷ்ணன்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை பரிசோதித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்

newstm.in

Trending News

Latest News

You May Like