1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா!

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா!


அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று யாரையும் விட்டுவைக்கவில்லை. சாமான்யன் முதல் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வரை எல்லோரைுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

அந்த வகையில் அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோகுல இந்திரா கடந்த 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like