1. Home
  2. தமிழ்நாடு

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா!

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா!


சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ லோகநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ லோகநாதனுக்கு (58) கொரோனா தொற்று இல்லை உறுதியானது.

இதனால் 14ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் சட்டமன்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். ஆனால் அன்றிரவே அவருக்கு திடீரென குளிர்காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் லோகநாதன் பங்கேற்கவில்லை.

இதையடுத்து சென்னையில் இருந்து அவர் வேலூர் திரும்பினார். காய்ச்சல் காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு கொரோனா சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு அவர் உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like