1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா அச்சுறுத்தல்.. தீபாவளி ஷாப்பிங்கை கவனமாக மேற்கொள்ள அறிவுறுத்தல் !

கொரோனா அச்சுறுத்தல்.. தீபாவளி ஷாப்பிங்கை கவனமாக மேற்கொள்ள அறிவுறுத்தல் !


இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் தான் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்னர் அம்மாநிலத்தில் வேகமாக கொரோனா பரவியபோதும் தீவிரமான நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது. உலக சுகாதார அமைப்பே கேரளாவை பாராட்டியது.

இதனால் கேரளாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் ஓணம் பண்டிகையால்தான் பரவத்தொடங்கியது. இதனால் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதாவது தீபாவளி பண்டிகை ஷாப்பிங்கை சமூக இடைவெளி விட்டு கவனமாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல்.. தீபாவளி ஷாப்பிங்கை கவனமாக மேற்கொள்ள அறிவுறுத்தல் !

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக பெரிய அளவிலான மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தாலுகா அளவிலான மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தற்போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் ஓணம் பண்டிகையால் மக்கள் அலட்சியமாக இருந்ததாலே அங்கு மீண்டும் கொரோனா அதிகளவில் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால், பொதுமக்கள், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால ஷாப்பிங்கை சமூக இடைவெளி விட்டு கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், பண்டிகை மற்றும் மழைக் காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல்.. தீபாவளி ஷாப்பிங்கை கவனமாக மேற்கொள்ள அறிவுறுத்தல் !

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து தற்போது 1.5 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் தாமாகவே மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தற்போது தகரம் வைத்து அடைக்கபடுவதில்லை. கொரோனா பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனா பாதிப்பு மேலும் குறைவது பொதுமக்கள் கையில்தான் உள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like