1. Home
  2. தமிழ்நாடு

“இந்த 5 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை தொடும்” : தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!

“இந்த 5 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை தொடும்” : தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!


தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கொரோனா உச்சத்தை தொடும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன்பைவிட குறைவாக உள்ளது. ஆனால் தற்போது பல்வேறு தளர்வுகள் அமலில் இருப்பதால் நோய் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி சென்னையை தவிர்த்து மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது.

இந்நிலையில் கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள தொற்று எண்ணிக்கையைக் கொண்டு கணிக்கும் போது ஐந்து மாவட்டங்களில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். எனவே குறிப்பிட்ட அந்த மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like