1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாவட்டத்தில் மட்டும் அதிக அளவில் குணமடையும் கொரோனா நோயாளிகள்!

இந்த மாவட்டத்தில் மட்டும் அதிக அளவில் குணமடையும் கொரோனா நோயாளிகள்!


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவையில் கடந்த ஐந்து நாள்களில் புதிததாக 7 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால் 86 பேர் குணமடைந்து வீடு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவது, கோவை மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் பணியாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதன் காரணமாக குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும், 50 பேரும் அடுத்த வாரத்தில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

newstm.in

Trending News

Latest News

You May Like