1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் தலைதூக்க ஆரம்பித்த கொரோனா !! அதிர்ச்சியில் பொதுமக்கள்..

மீண்டும் தலைதூக்க ஆரம்பித்த கொரோனா !! அதிர்ச்சியில் பொதுமக்கள்..


கேரளாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் ஒரு கட்டத்தில் குறைய ஆரம்பித்தது. ஆனால், இப்போது நிலைமை மாறி இருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;

கேரளாவில் புதியதாக 19 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் வெளிநாடு சென்று திரும்பியவர்கள். மொத்தம் 117 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் கண்ணூரில் 10 பேர், பாலக்காட்டில் 4 பேர், காசர்கோட்டில் 3 பேர் , மலப்புரம் மற்றும் கொல்லத்தில் தலா ஒருவர் என 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீண்டும் தலைதூக்க ஆரம்பித்த கொரோனா !! அதிர்ச்சியில் பொதுமக்கள்..

மாநிலத்தில் நேற்றும் 6 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது என்றார். மீண்டு (ம்) கொரோனா தன் வேலையை கேரளாவில் காட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like