1. Home
  2. தமிழ்நாடு

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா !! ஒமைக்ரான் பாதிப்பா என அச்சம்?

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா !! ஒமைக்ரான் பாதிப்பா என அச்சம்?


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் பரவியது. கர்நாடகா மாநிலத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு நேற்று ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் ஒமைக்ரான் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா !! ஒமைக்ரான் பாதிப்பா என அச்சம்?

சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியான தஞ்சை நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஓமிக்ரான் கொரோனா பரவிய நிலையில் தஞ்சை நபரின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. கொரோனா உறுதியான நபருக்கு திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like