1. Home
  2. தமிழ்நாடு

ஆடுகளுக்கு கொரோனாவா ? - 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு !

ஆடுகளுக்கு கொரோனாவா ? - 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு !


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் மனிதர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளுக்கு பரவாது என்று கூறப்பட்டது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சிங்கம், புலி, பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  

ஆடுகளுக்கு கொரோனாவா ? - 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு !

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆடு மேய்க்கும் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

இதனை அடுத்து அவர் வளர்ந்து வரும் ஆடுகளுக்கு சுவாச பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டாகவும் இதனால் அவருடைய 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஆடுகளுக்கு கொரோனாவா ? - 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு !

கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு மட்டும்தான் பரவும், விலங்குகளுக்கு பரவாது என்று கூறப்பட்ட நிலையில் திடீரென 50 ஆடுகளுக்கு தொற்று அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மனிதர்களே மீண்டு வர முடியாத நிலையில் விலங்குகளுக்கும் பரவினால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  

newstm.in 

Trending News

Latest News

You May Like