1. Home
  2. தமிழ்நாடு

லண்டனில் இருந்து சென்னை வந்த குழந்தைக்கு கொரோனா!!

லண்டனில் இருந்து சென்னை வந்த குழந்தைக்கு கொரோனா!!


லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 8 பேரில் ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் மீண்டும் உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை இருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஒமைக்ரான் உள்ளே நுழையவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இன்று காலை சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதியான தஞ்சை நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஓமிக்ரான் கொரோனா பரவிய நிலையில் தஞ்சை நபரின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.

லண்டனில் இருந்து சென்னை வந்த குழந்தைக்கு கொரோனா!!

கொரோனா உறுதியான நபருக்கு திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 8 பேரில் ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரண்டு குடும்பங்களை சேர்ந்த 8 பேரில் ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் உட்பட யாருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை.

லண்டனில் இருந்து சென்னை வந்த குழந்தைக்கு கொரோனா!!

8 பேரும் கிண்டி கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் பாதித்த இருவருக்கும் ஓமைக்ரான் உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களின் மாதிரிகள் மரபியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like