1. Home
  2. தமிழ்நாடு

விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா !! அதிர்ச்சியில் அதிகாரிகள்

விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா !! அதிர்ச்சியில் அதிகாரிகள்


சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு சினிமா , கிரிக்கெட் , அரசியல் தலைவர்கள் , பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐக்கு மாறி உள்ளது. வழக்கு தொடர்பாக சிபிஐ குழு உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தியது. வழக்கில் கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணை குழுவில் இருந்த 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட, அவர்கள்  மருத்துவமனையில் உள்ளனர். இந்நிலையில், மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி கொண்டு அலுவலகம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like