2 ரூபாய்க்கு கொரோனா மருந்து! தமிழக மருத்துவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, அது குறித்து அனைத்து கட்டுகரைகளையும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பினார். ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் அந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காத காரணத்தினால் தனது மனுவை பரிசீலித்து உத்தரவு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், இந்திய ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வசந்தகுமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை விசரித்த நீதிபதிகள், மருத்துவர் வசந்த குமார் கண்டுபிடித்த பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் என்ற மருந்தினை பரிசீலித்து விரைவில் உரிய பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். வசந்தகுமார் கண்டுபிடித்த இந்த மருந்தின் விலை இரண்டு ரூபாய்க்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in