தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு!
தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 35 பேர் கொரோனா தொற்றால் பலியானதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,018ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று 35 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் இணை நோய் இல்லாதவர்கள். சென்னையில் மட்டும் இதுவரை 3616 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 669 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 616 பேரும், கோவை மாவட்டத்தில் 547 பேரும், மதுரை மாவட்டத்தில் 417 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 378 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
newstm.in
Next Story