1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி!

முதல்வர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி!


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் பணியாற்றும் 4 பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனை தடுக்கும் விதமாக நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலக துணைச் செயலர், 2 அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு ஓட்டுநருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை சார்ந்தவர்களை தனிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தலைமைச் செயலக முதலமைச்சர் அலுவலகப் பிரிவு முதுநிலை தனிச் செயலாளர் தாமோதரன் கொரோனா பாதித்து உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது. 

முதல்வர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி!

newstm.in

Trending News

Latest News

You May Like