1. Home
  2. தமிழ்நாடு

மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற 35 பேருக்கு கொரோனா உறுதி..!

மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற 35 பேருக்கு கொரோனா உறுதி..!


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் பண்டிகை நாட்களில் அதிக அளவிலான பக்தர்கள் கூட்டம் கூடுவது தொடர்பாக கொரோனா தொற்று பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்து சென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் அதிகமானோர் 3 பேருந்துகளில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்துள்ளனர். சொந்த ஊர் திரும்பிய இவர்களில் இதுவரை 35 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்னும் ஒரு பேருந்தில் வந்த பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like