ஹெல்மெட் அணிந்து வந்த 50 பேருக்கு 1 கிலோ பூண்டு இலவசமாக கொடுத்த போலீசார்..!
![11](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/36d78048ecfd68be9ac48c1f2eeacab3.webp?width=836&height=470&resizemode=4)
சாலை விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடிபட்டு தான் பலரும் உயிரிழக்க நேரிடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பை தடுத்திட ஹெல்மட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட போக்குவரத்து போலீசார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் ஒருபகுதியாக போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்து வந்த டூவீலர் ஓட்டுனர் 50 பேருக்கு ஒரு கிலோ பூண்டை இலவசமாக வழங்கினர்.தற்போது ஒரு கிலோ பூண்டு ₹500-க்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில், விழிப்புணர்வுக்காக அதனை இலவசமாக வழங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.