1. Home
  2. தமிழ்நாடு

குட்டி குட்டி சமையல் டிப்ஸ் : உளுந்து மாவு அரைக்கும்போது ஐஸ் வாட்டர் ஊற்றி அரைத்தால்...

1

பூரி சுடும்போது அது நன்றாக உப்பி வரவேண்டுமானால் பூரி மாவு பிசையும்போது சிறிதளவு நெய்யும் மிதமான சூட்டில் வெந்நீரையும் விட்டு பிசைந்து சுட்டெடுத்தால் பூரி நன்கு உப்பி சாப்பிட மிருதுவாக இருக்கும்.

உளுந்து மாவு அரைக்கும்போது ஐஸ் வாட்டர் அல்லது மண்பானையில் வைக்கப்பட்ட ஜில்லென்ற தண்ணீரையும் ஊற்றி அரைத்தால் மாவு நிறைய கிடைக்கும் இட்லி, தோசையும் மிருதுவாக இருக்கும். 

வெங்காய தோசை இரண்டு பக்கமும் நன்கு வந்தால் தான் தோசை மிகுந்த சுவையாக இருக்கும் மேலும் சுவையாக இருக்க தோசையின் நடுவில் சிறிதாக ஓட்டை போட்டு அதில் எண்ணெயை ஊற்றினால் தோசை இன்னும் சுவையாக இருக்கும். 

எண்ணெய் உபயோகிக்கும் பாத்திரங்கள் தோசைக்கல் போன்றவற்றில் எண்ணெய் பிசுக்கு காணப்பட்டால் அதை அகற்ற பாத்திரங்கள் சூடாக இருக்கும்போது சிறிது மோர் விட்டு தேய்த்து பின் தேங்காய் நாரினால் அழுத்தி தேய்த்து கழுவினால் பிசுக்கு போய்விடும். 

குக்கரின் ரப்பர் வளையம் தளர்ந்துவிட்டால் அதை பிரிட்ஜில் அல்லது குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் இரண்டு நாட்கள் வைத்து அதன் பின்னர் உபயோகித்தால் பழைய நிலைபோன்று இறுக்கம் ஆகிவிடும். 

பச்சை காய்கறிகளை கூடையில் போட்டு ஒரு ஈரத்துணியால் மூடிவிட்டால் மூன்று நான்கு நாட்கள் வாடாமல் புத்தம் புது காய்கறிகளை போன்று இருக்கும். 

காய்கறிகளில் பிரட்டல் செய்யும்போது அதை முதலில் சாப்பிடுபவர்கள் உப்பு காரம் அதிகம் என்று சொல்லிவிட்டால் கவலைப்பட வேண்டாம் மீண்டும் அடுப்பில் வைத்து சூடாகி சிறிது பச்சரிசி மாவு தூவி ஒரு ஸ்பூன் நெய் போட்டு இறக்கினால் உப்பு காரம் குறைந்து மிகவும் சுவையாக இருக்கும். 

இட்லி சாம்பார் கெட்டியாக இருந்தால் வெறும் தண்ணீர் விடாமல் உப்பு மற்றும் மிளகு, சீரகத்தூள் வறுத்து பொடி செய்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து குழம்பில் ஊற்றி கிளறி இறக்கினால் வாசனையும் ருசியும் மாறாமல் இருக்கும். 

எண்ணெய் உபயோகிக்கும் பாத்திரங்கள் தோசைக்கல் போன்றவற்றில் எண்ணெய் பிசுக்கு காணப்பட்டால் அதை அகற்ற பாத்திரங்கள் சூடாக இருக்கும்போது சிறிது மோர் விட்டு தேய்த்து பின் தேங்காய் நாரினால் அழுத்தி தேய்த்து கழுவினால் பிசுக்கு போய்விடும். 

குக்கரின் ரப்பர் வளையம் தளர்ந்துவிட்டால் அதை பிரிட்ஜில் அல்லது குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் இரண்டு நாட்கள் வைத்து அதன் பின்னர் உபயோகித்தால் பழைய நிலைபோன்று இறுக்கம் ஆகிவிடும். 

பச்சை காய்கறிகளை கூடையில் போட்டு ஒரு ஈரத்துணியால் மூடிவிட்டால் மூன்று நான்கு நாட்கள் வாடாமல் புத்தம் புது காய்கறிகளை போன்று இருக்கும். 

மைசூர்பாக் செய்யும்போது ஆட்காட்டி விரலில் பாகை தொட்டுக்கொண்டு கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து பிடிக்கும்போது நூல் இழை வந்தால் அதுதான் பாகுபதம்.

கோதுமை மாவை கரைத்து தோசை சுடும் முன் மாவில் சிறிது எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் கருவேப்பிலை சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மாவில் கலக்கினால் கோதுமை தோசை அருமையாக இருக்கும். 

இடியாப்பத்திற்கு தேங்காய் பாலில் இரண்டு ஏலக்காய் தட்டி போட்டால்  மணக்கும் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.

ஸ்வீட் டிப்ஸ் :

குலோப் ஜாமூனுக்கு மாவு பிசையும்போது, தண்ணீருக்கு பதில் பால் சேர்த்துப் பிசைந்தால், உருண்டைகள் உதிர்ந்து போகாமல் இருக்கும்.

லட்டுக்கு பூந்தி தயாரிக்கும்போது கடலை மாவுடன் சிறிதளவு அரிசி மாவையும் கலந்துகொண்டால், பூந்தி முத்து முத்தாக வரும்.

கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும்போது, பதம் தவறி நீர்த்துவிட்டால், சிறிதளவு சோளமாவைக் கரைத்துச் சேர்க்கவும். அல்வா கெட்டிப்படுவதுடன் சுவையும் அதிகரிக்கும்.

அதிரசம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க, அதிரச மாவில் புளிக்காத தயிர்சேர்த்துப் பிசைந்து செய்யவும்.

மைசூர்பாகு செய்யும்போது, கடலைமாவுடன், முந்திரியைப் பொடித்துச் சேர்த்துப் பிசைந்தால் மைசூர்பாகு மிகவும் சுவையாக இருக்கும்.

பால் பவுடர், தேங்காய்த் துருவல், சர்க்கரைத்தூள், முந்திரிப் பொடி எல்லாவற்றையும் ஒரே அளவில் எடுத்து, நன்கு பிசைந்து, நெய் தடவிய தட்டில் பரப்பி ஃ ப்ரீசரில் வைத்து எடுத்து துண்டுகளாக்கி னால் இன்ஸ்டன்ட் பர்ஃபி தயார்.

ஜாங்கிரி உடையாமல் வரவேண்டுமென்றால் உளுந்து விழுதுடன் ஒரு ஸ்பூன் அரிசிமாவைக் கலந்துவிட்டால் போதும்.

அல்வா செய்யும்போது அல்வா பதம் தண்ணீராக இருப்பது போல் தெரிந்தால், சிறிது சோளமாவு சேர்த்துக் கிளறினால் அல்வா கெட்டிப்படும்.

தேங்காய்த் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து தேங்காய் பர்ஃபி செய்தால் பர்ஃபி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

கேசரி செய்யும்போது, ரவையுடன் பால்கோவா, பொடிப் பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழங்களை கலந்து, வேகவைத்து செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

ரவா லட்டு செய்யும்போது கொஞ்சம் அவலை மிக்ஸியில் ரவை போல் பொடித்துச் சேர்த்து நெய்யில் வறுத்து, பால் பவுடர் சேர்த்து லட்டு பிடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேங்காய் பர்ஃபி செய்யும்போது கலவையில் ராகிமால்ட் இரண்டு டீஸ்பூன் சேர்த்தால் பஃர்பி கம கமவென்றும் சூப்பர் சுவையிலும் இருக்கும்.

Trending News

Latest News

You May Like