1. Home
  2. தமிழ்நாடு

நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்..!

1

 நீட் தேர்வு மே மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டு, கடந்த  4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மாநிலத்தில் அதிகம் பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று தேர்ச்சி, கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட விவகாரங்கள் நீட் தேர்வு முறைகேடு குறித்த பிரச்னைகளை பூதாகரமாக்கி உள்ளன. 

 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் போராட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 நீட் தேர்வில் நடந்த முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.  அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். 

நீட் தேர்வில் நடைபெற்றுள்ள  முறைகேடுகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தொடர் மவுனத்தை கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like