1. Home
  2. தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு சலுகைகளை வாரி இறைந்த காங்கிரஸ்! சூடு பிடிக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்!

வாக்காளர்களுக்கு சலுகைகளை வாரி இறைந்த காங்கிரஸ்! சூடு பிடிக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்!


பீகார் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பிகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் உள்ளார். அவரது கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைந்துள்ளது.

அதே போல, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஆர்ஜேடி ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில், முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட ஏராளமான இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில், பாஜக தேர்தல் அறிக்கை தயாரித்து வருகிறது.

Trending News

Latest News

You May Like