1. Home
  2. தமிழ்நாடு

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 1,000 ரூபாய் அபராதம்..!

W

இரு சக்கர வாகனம் ஓட்டும்போது அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு. இந்த உத்தரவுக்கு அனைவரும் கீழ்படிய வேண்டும்.

ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இந்த உத்தரவை பின்பற்ற தவறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் சந்திப்பில் இருந்து குழித்துறை சந்திப்பு இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இதில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார். விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை புகழ்ந்து முழக்கமிட்டவாறு அவர்கள் சென்றனர். அப்போது விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை தலைக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியது.

உடனடியாக கொதித்து எழுந்த நெட்டிசன்கள், எம்எல்ஏக்களுக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பினர். மேலும் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து அவருக்கு போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

ஏற்கனவே விளவங்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்றார். எம்.பி. தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு அளிக்காததால், அவர் பாஜகவுக்கு தாவினார்.

இதைத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த சட்டப் பேரவை தொகுதிக்கும் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதில் தனக்கு மீண்டும் பாஜக சார்பில் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த விஜய தாரணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விளவங்கோடு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பட், பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி ஆகியோர் களமிறங்கினர்.

இதில் தாரகை கத்பர்ட் 91 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் தொற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

Trending News

Latest News

You May Like