1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் சென்னையில் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் : செல்வப்பெருந்தகை அறிவிப்பு..!

1

வரும் 11-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

 இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் இந்த தேர்தலில் வெற்றி வெற்ற எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட 711 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில்,  பல தொகுதிகளில் பா.ஜ.க. அதிக வாக்குகள் பெற்றது குறித்தும், வரும் காலங்களில் அதன் வளர்ச்சியை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை தமிழகத்தில் பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசியலில் வலிமை மிக்க சக்தியாக காங்கிரசை பலப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு எதிர்கால செயல் திட்டங்களை வகுக்க ஜூன் 11-ம் தேதி தேனாம்பேட்டை பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது. 

பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்ட அனைவரும் தவறாமல் வருகை புரிந்து கட்சியை வலிமைப்படுத்துகிற முயற்சிக்கு உறுதுணையாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறுவதற்கு அனைவரும் தவறாமல் வருகை புரியும்படி அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like