1. Home
  2. தமிழ்நாடு

தேவாலயம் கட்டுவது தொடர்பாக மோதல்.. துப்பாக்கி காட்டி மிரட்டிய பாதிரியார் !



தேவாலயம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே எஸ்.பி.நத்தத்தில் தேவாலயம் கட்டுவது தொடர்பாக இரு பாதிரியார்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அரசு புறம்போக்கு நிலத்தில் தேவாலயம் கட்ட பாதிரியார்கள் ஜெயப்பிரகாஷ்-ஆனந்த் இடையே மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தில் பாதிரியார் ஆனந்த் தரப்பினர் கிரிக்கெட் விளையாடியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த பாதிரியார் ஜெயப்பிரகாஷ் கிரிக்கெட் விளையாடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தேவாலயம் கட்டுவது தொடர்பாக மோதல்.. துப்பாக்கி காட்டி மிரட்டிய பாதிரியார் !

இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பாதிரியார் ஜெயபிரகாஷ் துப்பாக்கியை காட்டி எதிர்தரப்பினரை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், ஜெயபிரகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். 
 

newstm.in 

Trending News

Latest News

You May Like