சட்டவிரோத மதுபானம் தொடர்பான புகார்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம் - காவல்துறை அறிவிப்பு..!

கோயம்புத்தூர் சூலூரில் உள்ள ஒரு குடோனில் புதுக்கி வைத்திருந்த 5145 லிட்டர் எரி சாராயம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்கா அருகே ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 215 வெள்ளை நிற கேனில் 7525 லிட்டர் எரிசாராயம் கடத்திவரப்பட்டத்தை கண்டுபிடித்தனர். லாரி மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போதைய விசாரணையில் இந்த எரிசாராயம் கர்நாடகா மாநிலம் தார்வடத்திலிருந்து பாலக்காடு கேரளாவுக்கு கடத்திவரப்பட்ட உறுதிப்படுத்தியுள்ளது. இந்த எரிசாராயம் கள்ளில் கலக்கும் நோக்கத்துடன் கடத்திவரப்பட்டதாக தெரியவருகிறது. செயல்பாட்டின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுபானத்தை கடந்த உதவிய லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற சட்டவிரோத மதுபான வர்த்தகங்களை தடுக்கும் நோக்கில், காவல்துறை (Enforcement Bureau of CID) தொடர்ந்து கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
பொது மக்கள் சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண். 10581 அல்லது CUG எண்.9498410581 என்ற எண்ணிற்கு தகவல் வழங்கலாம். வழங்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்கா அருகே ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 215 வெள்ளை நிற கேனில் 7525 லிட்டர் எரிசாராயம் கடத்திவரப்பட்டத்தை கண்டுபிடித்தனர். லாரி மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போதைய விசாரணையில் இந்த எரிசாராயம் கர்நாடகா மாநிலம் தார்வடத்திலிருந்து பாலக்காடு கேரளாவுக்கு கடத்திவரப்பட்ட உறுதிப்படுத்தியுள்ளது. இந்த எரிசாராயம் கள்ளில் கலக்கும் நோக்கத்துடன் கடத்திவரப்பட்டதாக தெரியவருகிறது. செயல்பாட்டின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுபானத்தை கடந்த உதவிய லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற சட்டவிரோத மதுபான வர்த்தகங்களை தடுக்கும் நோக்கில், காவல்துறை (Enforcement Bureau of CID) தொடர்ந்து கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
பொது மக்கள் சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண். 10581 அல்லது CUG எண்.9498410581 என்ற எண்ணிற்கு தகவல் வழங்கலாம். வழங்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.