1. Home
  2. தமிழ்நாடு

சரண்யா பொன்வண்ணன் மீது புகார்..!போலீசார் விசாரணை

Q

தமிழ் சினிமாவின் அம்மா வேடம் என்றாலே நம் பலருக்கும் நினைவு வருவது சரண்யாவை தான். அவரை தாண்டி எவராலும் ஒரு அம்மாவின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த முடியாது. இவர் தனுஷ், அஜித்,சூர்யா,தனுஷ், விமல், ஜீவா போன்ற தமிழ் ஹீரோக்களுக்கு படங்களில் அம்மாவாக நடித்து பிரபலமான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர், இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு, அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின்னர், எம்டன் மகன், களவாணி, தென்மேற்கு பருவக்காற்று, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலையில்லா பட்டதாரி ஆகிய திரைப்படங்களில் அம்மா வேடத்தில் முத்திரை பதித்தார். தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே ஹீரோக்கள் முதலில் தேர்வு செய்வது சரண்யா பொன்வண்ணனை தான் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில், நடிகை சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி என்ற பெண், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் நடிகை சரண்யா பொன்வண்ணன் வசித்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவியின் வீட்டில், 20 அடி நீள இரும்பு கேட் இருக்கிறது.கதவை திறந்த போது வெளியில் நின்ற சரண்யாவின் காரில் அந்த கதவு உரசுவது போல் சென்றுருக்கிறது.இவ்வாறு இருக்க சரண்யா குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவி என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் சமாதானம் பேசி வருகின்றனர். இருதரப்பும் சமாதானம் அடையும் பட்சத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Trending News

Latest News

You May Like