1. Home
  2. தமிழ்நாடு

தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு..!

1

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் 77 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேதகு ஆளுநர் 15. 08. 2023 ஆம் தேதி மாலையில் வழங்கும்  தேனீர் விருந்துக்கு  வருமாறு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். அது கிடைக்கப் பெற்றோம்.

ஆனால், ஆளுநரின் நடவடிக்கைகளும், செயல்களும் அவரது அதிகார எல்லைகளை மீறி இருப்பதாலும். குறிப்பாக ‘நீட்’ தேர்வுக்கான விதிவிலக்கு கேட்ட மாணவரின் பெற்றோரை அவமதித்து, தற்போது அவரது பொறுப்பில் இல்லாத “நீட்” விலக்கு மசோதாவிற்கு எப்போதும் கையெழுத்து போடமாட்டேன் என்ற ஆத்திரமூட்டி, அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில் ஆளுநரின் தேனீர் விருந்து நிகழ்வை புறக்கணிப்பது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like