நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் தகனம்.. இறுதிச் சடங்கிற்கு நேரில் வந்த சீமான்..!

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சாந்தி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை சாந்தி காலமானார். தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து சாந்தியின் உடலுக்கு இன்று காலை 11 மணி அளவில் இறுதி சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அதற்காக சென்னை தேனாம்பேட்டையில் இருந்து பெசன்ட் நகர் மயானத்திற்கு நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கவுண்டமணி தனது மனைவிக்காக சடங்குகளை செய்தார். முன்னதாக, சீமான் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல், சாந்தியின் உடலுக்கு நடிகர்கள் கார்த்தி, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.