1. Home
  2. தமிழ்நாடு

ஒரே ஒரு முறை மணிப்பூருக்கு வாங்க! - குத்துச்சண்டை வீரர் உருக்கம்..!

Q

மணிப்பூர் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதலால் இதுவரை 200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் அவ்வப்போது பதற்றம் இருந்து வரும் நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரன், பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ‘மணிப்பூரில் வன்முறை நீடிக்கிறது. கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது.
அங்கு மக்கள் செத்து மடிகின்றனர். பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளன. குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஒரே ஒரு முறை மணிப்பூருக்கு வாங்க, மணிப்பூரின் அமைதியை மீட்டெடுங்கள்’ என அழுகுரலோடு பேசியுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்த இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி, ‘மணிப்பூரின் சுங்ரெங் கோரென்.. மணிப்பூர் பிரதமரின் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருந்திருந்தால், மணிப்பூரின் ஒவ்வொரு குடிமகனும் இன்று அழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என குறிப்பிட்டுள்ளார்

Trending News

Latest News

You May Like