1. Home
  2. தமிழ்நாடு

ஒரு மணி நேரத்தில் லாகூரை கைப்பற்றிவிடலாம் - கர்னல் தியாகராஜன்..!

1

கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகள் மோடியிடம் போய் சொல்லுங்கள் என்றும் கூறிவிட்டு சென்றனர்.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பதிலுக்கு பாகிஸ்தானும் அதிரடி காட்டி வருகிறது. நேற்று சர்வதேச எல்லைக்கோட்டை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை பிடித்து சென்ற பாகிஸ்தான் படையினர், இன்று எல்லைக் கோட்டு பகுதியில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான கர்னல் தியாகராஜன் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் என்ன நடக்கும்? இந்திய ராணுவத்தின் வலிமை எப்படி உள்ளது என்பது குறித்து அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, "மிக ஆகச் சிறந்த தலைமையுடைய ஜெனரல்கள் எல்லாம் நம் ராணுவத்தில் உள்ளார்கள். தாக்குதல் நடத்துங்கள் என்று காலையில் கூறிவிட்டால் இன்று மதியமே கராச்சியில் நம் ராணுவத்திற்கு லஞ்ச் இருக்கும். எந்த ஒரு ராணுவமும் இந்திய ராணுவத்துடன் மோதுவதற்கு 100 முறை யோசிக்க வேண்டும்.

பிரதமர் மோடி நாளை மதியம் கராச்சியில் எனக்கு லஞ்ச் வேண்டும் என்று அறிவித்து விட்டால் நாளை மதியம் நாம் கராச்சியில் இருப்போம். அதாவது நாளை மதியம் நாம் கராச்சியை கைப்பற்றி விடுவோம். இதேபோல் பிரதமர் மோடி நமது ராணுவ தலைமைகளை அழைத்து நாளை மதியம் எனக்கு லாகூரில் லஞ்ச் வேண்டும் என்று கூறிவிட்டால் நாளை மதியத்திற்குள் அவருக்கு அங்கு லஞ்ச் தயாராகிவிடும். ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம்.

அந்த அளவுக்கு திறமை வாய்ந்தது இந்திய ராணுவம். பிரதமர் மோடி அங்கு அழைக்கப்படுவார். அங்கு அவருக்கான மதிய உணவு அளிக்கப்படும். இந்திய ராணுவத்தின் வலிமையை அவ்வளவு எளிதாக எடை போட்டுவிட முடியாது. ராணுவ எந்திரங்களை விட இந்திய ராணுவ வீரர்களின் திறமையும், ராணுவ தளவாடங்களை கையாளுபவர்களின் திறமையும் தான் முக்கியம். நம் ராணுவ வீரர்கள் மனதிடமும் திறமையும் வாய்ந்தவர்கள்.

எல்லோரிடமும் வில் இருந்தது, எல்லோரிடமும் அம்பு இருந்தது. ஆனால் அர்ஜுனன் ஒருவர்தான். அதுபோன்றுதான் இந்திய ராணுவத்தின் வீரமும் தீரமும், அது உலகின் எந்த ராணுவத்திடமும் கிடையாது. அது நிரூபிக்கப்பட்டது. எங்கு சென்றாலும் இந்திய ராணுவம் தலைசிறந்த ராணுவமாக இருக்கும். வரலாற்றை திருப்பிப் பார்க்கும்போது இந்திய ராணுவம் பற்றிய பல விஷயங்கள் தெரிய வரும்.

பாகிஸ்தானை பொருத்தவரை ராணுவத்தில் வலிமை கிடையாது. ராணுவத்தின் தளவாடங்கள் சரியில்லை. ராணுவ வீரர்கள் ஊக்கப்படுத்தப்படவில்லை. அங்கு பொருளாதாரம் சரியில்லை. தலைமை சரியில்லை. எதுவுமே சரியில்லாத போது அவர்கள் எப்படி போருக்கு தயாராக முடியும்? சர்வதேச நாடுகள் தற்போது போரை நிறுத்தும் நடவடிக்கையில் இறங்க மாட்டார்கள். முதலில் அடிக்க விடுவார்கள்.

இதுவரை எந்த தலைவர் இந்தியா அமைதியை நோக்கி செல்ல வேண்டும் என கூறியிருக்கிறார்? எந்த நாடும் இதுவரை அப்படி சொல்லவில்லை. அமெரிக்கா ரஷ்யா இங்கிலாந்து உள்ளிட்ட எந்த நாடுகளுமே அமைதி பேச்சு வார்த்தைப் பற்றி பேசவில்லை. நாம் உள்ளே புகுந்து அடித்த பிறகு தான் அவர்கள் வருவார்கள். ஒரு முறை நாம் அடித்து துவம்சம் செய்தால் மட்டுமே அவர்கள் பேச வருவார்கள்" இவ்வாறு கர்னல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like