இரண்டு கைகளை இழந்த பெண்ணுக்கு புது நம்பிக்கை கொடுத்த கோவை அரசு மருத்துவமனை!

கோத்தகிரியை சேர்ந்த ருக்மணி (32), கடந்த 2024 ஆம் ஆண்டு தனது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டு இருந்த தனது குழந்தைகளை அழைப்பதற்காகச் சென்ற போது எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் அவரது இரு கைகளும் செயலிழந்தன.
இதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் ருக்மணி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அவருக்கு அதிநவீன ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ருக்மணி தனது அன்றாட பணிகளைச் சுயமாக மேற்கொள்ளவும், கைகளை பயன்படுத்தவும் ஏதுவாக 'யுனிவர்சல் கப்' என்ற சுய உதவி சாதனம் மூலம் அவருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதன் விளைவாக, தற்போது ருக்மணி தனது பெயரை எழுதவும், தனது அன்றாட வேலைகளை பிறர் உதவியின்றி செய்யவும் உள்ளார்.