1. Home
  2. தமிழ்நாடு

பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1

12-வது  சர்வதேச செஸ் தொடர் நார்வே நாட்டின் ஸ்வாடன்ஞர் நகரில் நடந்து வருகிறது. இதில் தலா 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி பங்கேற்றுள்ளனர். 

இதனிடையே, கிளாசிகள் செஸ்சின் 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா உலகின் நம்பன் ஒன் வீரர் மாக்னஸ் கால்சனை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற 5-வது சுற்றில் உலக செஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாபியோனாவை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள வீரர்களை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். இந்நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 

நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா மிகவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கிளாசிகள் செஸ்சில் உலகின் நம்பர் ஒன் மற்றும் நம்பர் 2 வீரர்களை வீழ்த்துவது சிறப்பான சாதனையாகும். 

தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள். உங்களின் திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.   

Trending News

Latest News

You May Like