சிவப்பு சட்டையில் மே தின வாழ்த்து சொன்ன முதல்வர்..!

சென்னை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின். திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மே 1 விடுமுறை என்று கொண்டு வந்தவர் அறிஞர் அண்ணா என்றும் அதை சட்டமாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்றும் கூறினார். மேலும் மே தின பூங்காவை அமைத்து அங்கு நினைவுச்சின்னத்தை உருவாக்கியர் கலைஞர் கருணாநிதி என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயதி ஸ்டாலின், திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் விடுத்த மே தின வாழ்த்து செய்தியில், உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். உழைப்பாளர்களுக்காக மே நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, சென்னையில் மே நாள் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளை திமுக ஆட்சிதோறும் அண்ணா, கலைஞர் செய்து வந்தனர் என்றும் நினைவு கூர்ந்தார்.
அப்பெருந்தலைவர்களின் வழி நடக்கும், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஏராளமான, இந்தியாவுக்கே வழிகாட்டும் பல தொழிலாளர் நலடத்திட்டங்களைச் செய்து வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின். மேலும் உழைப்பாளர்களின் நலன் காக்கும் நமது முயற்சிகள் தொடரும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என்றும் அதற்கு இந்த மே நாள் மேலும் நமக்கு ஊக்கத்தினை வழங்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.