முதல்வருக்கு ரூ.10,000 அபராதம்.. நீதிமன்றம் அதிரடி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/4e550e6e5b39547ba1b06f77659f6bf1.webp?width=836&height=470&resizemode=4)
2022 ஏப்ரலில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் மரணம் அடைந்த வழக்கில், அப்போதைய அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், அவரைக் கைது செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக, சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது.
முதல்வர் சித்தராமையா, மாநில கேபினட் அமைச்சர்கள் எம்பி பாட்டீல், ராமலிங்க ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் முதல்வர் சித்தராமையா மார்ச் 6ஆம் தேதியும், போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி மார்ச் 7ஆம் தேதியும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மார்ச் 11ஆம் தேதியும், கனரக தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் மார்ச் 15ஆம் தேதியும் ஆஜராக கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.