1. Home
  2. தமிழ்நாடு

வரும் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்: சிஐடியூ அறிவிப்பு..!

Q

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை 1000-க்கும் மேற்பட்டோர் கடந்த செப்டம்பர் மாதம் ஊதிய உயர்வு, தொழிற் சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 30 நாட்களுக்கும் மேலாக நீடித்தது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த, பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு அக்டோபர் 14-ம் தேதி, வழக்கம் போல தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
போராட்டத்தில் இருந்து பணிக்கு திரும்பிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஆலைக்கு உள்ளே முந்தைய பணி வழங்கமால் வேறு வேறு பிரிவுக்கு மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.சிஐடியூ தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோருக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். நிர்வாகம் உருவாக்கியுள்ள தொழிற்சங்கத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக வரும் 19-ம் தேதி தொழிற் சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தை சிஐடியூ தொழிற் சங்கம் சார்பில் நடத்த உள்ளனர்.

Trending News

Latest News

You May Like