1. Home
  2. தமிழ்நாடு

வெளியான சுற்றறிக்கையால் பரபரப்பு : இனி கோவில் அர்ச்சனை தட்டில் விழும் காணிக்கை அர்ச்சகர்களுக்கு சொந்தமில்லை..!

1

மதுரை மாவட்டம் நேதாஜி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுத சுவாமி கோவில் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த நிலையில் பாலதண்டாயுத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
 

இதில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்துவது சுவாமிக்கும் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை புடுங்கி உண்டியலில் போடும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக அர்ச்சகர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

இந்த நிலையில் செயல் அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில், மதுரை நகர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கை இணை உண்டிகளில் செலுத்த உத்தரவிடப்படுகிறது இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வர பெரும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும் எனவும் தட்டு காணிக்கை உண்டியல் செலுத்தாத அர்ச்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, இப்படிக்கு திருக்கோவில் செயல் அலுவலர்" தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அர்ச்சகர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அச்சகர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்

பொதுமக்கள் குறித்து கருத்து கேட்கையில் கோவில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு இது நாங்களாக கொடுப்பது நாங்களாய் தட்டில் போடுவது அதை பிடுங்குவதற்கு எந்த அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது.

இது போன்ற சுற்றறிக்கை அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எனவும் இந்த சுற்றறிக்கை அவர்களுடைய வாழ்வாதாரத்தே பாதிக்கும் எனவும் இதை சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் இது மிக மிக கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like