1. Home
  2. தமிழ்நாடு

கிறிஸ்தவ மதபோதகர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்!

1

கோவையை சேர்ந்த கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்​தனை கூடத்​தின் மதபோதகர் ஜான் ஜெப​ராஜ்.இவர் கடந்த 2024 மே 21-ம் தேதி கோவை ஜி.என்​.மில்ஸ் பகு​தி​யி்ல் உள்ள தனது வீட்​டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்​தி​யுள்​ளார். அப்​போது, அந்த நிகழ்​வில் பங்​கேற்ற 2 சிறுமிகளுக்கு அவர் பாலியல் துன்​புறுத்​தல் அளித்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இது தொடர்​பாக பாதிக்​கப்​பட்ட சிறுமிகள் அளித்த புகாரின்​பேரில், ஜான் ஜெப​ராஜ் மீது கோவை காந்​திபுரம் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின்​கீழ் வழக்கு பதிவு செய்​துள்​ளனர். இந்த வழக்​கில் தலைமறை​வாக உள்ள ஜான் ஜெப​ராஜை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். அவர் வெளி​நாடு​களுக்கு தப்​பிச் செல்​லாமல் இருக்க, விமான நிலை​யங்​கள், துறை​முகங்​களுக்கு லுக்​-அவுட் நோட்​டீஸ் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் ஜான் ஜெப​ராஜ் தனக்கு முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார். ‘நானும், மனை​வி​யும் பிரிந்து வாழ்​கிறோம். எனது மனைவி மற்​றும் அவரது குடும்​பத்​தினரின் தூண்​டு​தலின்​பேரில் சிறுமிகளை வைத்து எனக்கு எதி​ராக பாலியல் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. காவல் துறை விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு அளி்க்க தயா​ராக இருக்​கிறேன். எனவே, முன்​ஜாமீன் வழங்க வேண்​டும்'’ என்று அதில் கோரி​யுள்​ளார். இந்த மனு விரை​வில்​ வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

Trending News

Latest News

You May Like