நாளை சித்திரை அமாவாசை : தடைகள் விலக சொல்ல வேண்டிய 5 மந்திரங்கள்

சித்திரை மாதம் என்பது பலவகையிலம் ஆன்மிக சிறப்பு வாய்ந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு திதிக்கு ஒவ்வொரு சிறப்பு இருப்பது போது அமாவாசை திதிக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. சித்திரை மாத அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் திருமணம், வேலை, தொழில் என வாழ்வில் ஏற்படும் எப்படிப்பட்ட தடையும் விலகி விடும். வீட்டில் இருக்கம் வறுமை நிலை , நீண்ட நாள் நோய்கள் ஆகியவை நீங்கும். பொதுவாகவே அமாவாசை நாளில் தானங்கள் வழங்குவதால் பாவங்கள் நீங்கும். உணவு, உடை போன்றவற்றை தானமாக வழங்குவது சிறப்பானதாகும். சித்திரை மாத அமாவாசையில் தானம் வழங்குவதால் அதன் பலன் இரண்டு மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.
சூரிய பகவான் சரியாக கிழக்கு திசையில் உதிக்கும் மாதம் சித்திரை மாதம் என்பதால், சித்திரை அமாவாசையில் விரதம் இருந்து சூரியனுக்கு நீர் படைத்து வழிபட்டால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகரிக்கும். அதே போல் சந்திரனின் பலம் அதிகரிக்க வேண்டும், மனக்குழப்பங்கள் அகல வேண்டும் என்பவர்களும் சித்திரை அமாவாசையில் நவகிரக வழிபாடு செய்யலாம்.
2025ஆம் ஆண்டுக்கான சித்திரை அமாவாசை ஏப்ரல் 27ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் சில மந்திரங்களைச் சொல்வதன் மூலம் தடைகளை நீக்கலாம். குறிப்பாக, வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள், துரதிர்ஷ்டம் போன்றவற்றை விரட்டலாம். இந்த மந்திரங்களை எப்படி, எப்போது உச்சரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அமாவாசையில் சொல்ல வேண்டிய 5 மந்திரங்கள் :
1. அமைதி மற்றும் வளமைக்கான மந்திரம்:
"ஓம் பூரிதா பூரி தேஹினோ, மா தப்ரம் பூர்ய பார" என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் வாழ்க்கையில் அமைதி, சந்தோஷம் கிடைக்கும். மனமும், இதயமும் அமைதியடையும்.
2. வாழ்க்கையில் வெற்றி பெற:
"ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரத்தை அமாவாசையில் சொல்லலாம். விஷ்ணுவுக்கு உகந்த இந்த மந்திரம் தடைகளை நீக்கும். குறிப்பாக, வேலை, உறவு, வளர்ச்சி போன்றவற்றில் இருக்கும் தடைகள் விலகும். இந்த மந்திரத்தை பக்தியுடன் சொன்னால் வெற்றி கிடைக்கும்.
3. விஷ்ணு காயத்ரி மந்திரம்:
"ஓம் நாராயணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி, தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்" என்ற மந்திரத்தை ருத்ராட்ச மாலையை வைத்து 108 முறை சொல்ல வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும். இந்த மந்திரம் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கும். ஆன்மீக உணர்வை மேம்படுத்தும்.
4. தடைகளை நீக்கும் மந்திரம்:
"ஓம் சர்வபாதா விநிர்முக்தோ, தன-தான்யஹ் சுதன்விதஹ, மனுஷ்யோ மத்ப்ரசாதேன பவிஷ்யதி ந சம்ஷயஹ" என்ற மந்திரத்தை சித்திரை அமாவாசையில் சொல்லலாம். இந்த மந்திரம் தடைகளை நீக்கும். குழந்தைகள் நலமாக இருக்கவும், வீட்டில் செல்வம் பெருகவும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.
5. நல்ல ஆரோக்கியத்திற்கான மந்திரம்:
"சர்வ சித்தி மந்திர ஸ்வரூபிணி தன்வந்தர்யை நமஹ" என்ற மந்திரத்தை சொல்லலாம். இந்த மந்திரம் தன்வந்திரி பகவானுக்கு உரியது. இதைச் சொல்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும்.