1. Home
  2. தமிழ்நாடு

'ரேபிட் டெஸ்ட் கிட்' எடுத்துவர சீனா விரைந்த இந்திய விமானம்!

'ரேபிட் டெஸ்ட் கிட்' எடுத்துவர சீனா விரைந்த இந்திய விமானம்!


கொரோனா சிகிச்சைக்காக ரேபிட் டெஸ்ட் கிட் உள்ளிட்ட மருந்து பொருட்களை ஏற்றி வர ஏர் இந்தியா விமானம் சீனா விரைந்துள்ளது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நோக்கில் மத்திய மாநில அரசுகள் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 300ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 991 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 480 பேர் உயிரிழந்த நிலையில், 1,992 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில் இந்தியாவில் வைரஸ்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீனாவில் இருந்து மருத்துவ உபகரணங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. சீனாவின் ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கிலிருந்து கடந்த 10 நாட்களில், 170 டன் அளவிலான பொருட்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் கூடுதலாக 300 டன் மருந்துப் பொருட்களை கொண்டுவர ஏர் இந்தியாவின் B-787 விமானம் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சுவா நகருக்குச் சென்ற புறப்பட்டுச் சென்றது.

newstm.in

Trending News

Latest News

You May Like