இனி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் அருகிலேயே இருக்கை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/3ac2de2274ac22b936b4371038274752.jpeg?width=836&height=470&resizemode=4)
விமானங்களில் பயணிக்கும் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா்களுடன் இருக்கை ஒதுக்கப்படுவதில்லை என்று புகாா் எழுந்தது.
இந்நிலையில், டிஜிசிஏ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் விமான போக்குவரத்து வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவில், உள்நாட்டு விமான போக்குவரத்தும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.