1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING:- முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் பரிசோதனை..!

#BREAKING:- முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் பரிசோதனை..!


கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருதோடு, தடுப்பூசி பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடல் சோர்வு சற்று அதிகமாக இருந்தது. மருத்துவர்கள் பரிசோதித்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வீட்டு தனிமையில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று மாலை, பரிசோதனை முடிவு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like