1. Home
  2. தமிழ்நாடு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்ததால் வரதராஜபுரம் பி.டி.சி.குடியிருப்பு பகுதிகள் மகாலட்சுமி நகர், இரும்புலியூர் டி.டி.கே.நகர், வன்னியன்குளம், முடிச்சூர் அமுதம் நகர் பகுதிகளில் ஏரித்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளத்தை வடிய வைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து மழைநீரை வடிய வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் எந்த அளவுக்கு மழைநீர் வடிந்துள்ளது.

இந்நிலையில், என்னென்ன வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளன என்பதை கண்டறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். முதலில் இரும்புலியூர் டி.டி.கே. நகர், வன்னியன்குளம் பகுதிக்கு சென்று அங்கு நடைபெற்றுவரும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டார். அதன் பிறகு முடிச்சூர் ஊராட்சியில் அமுதம் நகர் பகுதியில் நடைபெற்ற வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.

CM-Stalin-visits-2-districts

இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம் டி.டி.சி.குடியிருப்பு பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் மகாலட்சுமி நகர் மேம்பாலம் பகுதியில் நீர்வளத்துறையால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அதிகாரி அமுதா, மாவட்ட பஞ்சாயத்து குழு சேர்மன் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

Trending News

Latest News

You May Like