1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து..!

1

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து கரூருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர்  மு.க.ஸ்டாலினின் நேற்றும், இன்றும் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர்  மு.க.ஸ்டாலினின் நேற்று தி.நகர் மேம்பால திறப்பு நிகழ்ச்சி, இன்று ராமநாதபுரம் செல்லும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க. நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like