ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காதவர்களின் கஷ்டத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள பல குடும்ப தலைவிகளின் விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இதனால், உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்வதற்கு தாலுகா அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் உதவி மையங்கள், இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், தகுதியுள்ள எந்தவொரு குடும்ப தலைவியும் விடுபட்டுவிட கூடாது என முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனிடையே, தமிழக அரசு அறிவித்திருந்த நிபந்தனைக்கு உட்பட்டு இருந்தால் மேல்முறையீடு செய்யும் குடும்ப தலைவிகளுக்கு அடுத்த மாதத்தில் இருந்து உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மேல்முறையீடு செய்தால் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்குமா என பெண்களின் மத்தியில் பதட்டம் நிலவி வருகிறது. எனவே, ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காதவர்களின் கஷ்டத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.