கோல்ப் ஆடிய முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 5 நாட்கள் பயணமாக தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளார் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.கொடைக்கானல் பாம்பர்புரம் கிராம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ட்ரோன் கேமராக்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதை மற்றும் முதலமைச்சர் தங்கும் பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ஃப் மைதானத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பசுமை புல்வெளியில் சிறிது தூரம் நடந்து சென்ற அவர் கோல்ப் விளையாடி உற்சாகமடைந்தார். சிறிது நேரம் விளையாடிய பிறகு கோல்ப் மைதானத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சரை காண அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.சுற்றுலாப் பயணிகளுடன் சிறிது நேரம் உரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் முதலமைச்சருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.