பூந்தமல்லியில் ₹540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “பல்வேறு அமைப்புகள் இந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில், கலைஞரின் மகன் என்ற முறையில் உங்களுக்கு நன்றி கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். பெற்றோர் வைத்த பெயரை கூட கூப்பிடாமல் ‘கலைஞர்’ என்று தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் கருணாநிதி. அவர் மறைந்த போது தமிழ்நாடே கலங்கி நின்றது.
இந்த அரசு திரைத் துறையினருக்கு பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டு இருக்கிறது. அமைச்சர் உதயநிதி சினிமா துறையில் கால் பதித்தவர். பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைய உள்ளது. ரூ.25 கோடி மதிப்பில் எம்ஜிஆர் திரைப்பட நகரம் மேம்ப்படுத்தப்படும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.