5 பைசா 10 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி..!
குளித்தலையில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் புதுவிதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.அதன்படி பழைய நாணயங்களை நினைவுபடுத்தும் வகையில் 5 பைசா, 10 பைசா மற்றும் 20, 25 பைசா உள்ளிட்ட பழைய நாணயங்களை கொண்டு வருவோருக்கு சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதை அறிந்த அந்த குளித்தலை பகுதி மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் , அதிகளவில் முந்தைய பழைய நாணயங்களை கொடுத்து பிரியாணி வாங்கி சென்றனர்.
திடீரென கடையின் முன் மக்கள் கூட்டம் அலைமோதியது. பழைய கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் கடையை தற்காலிகமாக மூடினர்.
#WATCH | குளித்தலையில் பழைய 1, 2, 5 மற்றும் 10 பைசா நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் கடையின் முன் குவிந்த மக்கள்
— Sun News (@sunnewstamil) February 4, 2024
பழைய கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பிரியாணியை வாங்க மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் கடையை… pic.twitter.com/f2VbyNI6dQ
#WATCH | குளித்தலையில் பழைய 1, 2, 5 மற்றும் 10 பைசா நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் கடையின் முன் குவிந்த மக்கள்
— Sun News (@sunnewstamil) February 4, 2024
பழைய கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பிரியாணியை வாங்க மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் கடையை… pic.twitter.com/f2VbyNI6dQ