அமைச்சருக்கு செக்..! நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் சம்மன்!

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ நிலத்தை முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி பெயருக்கு மாற்றம் செய்ததாக அமைச்சர் மா.சுப்ரமணியன் மீது பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருவதால் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்றும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் மா.சுப்பிரமணியன் தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயவேல், குற்றச்சாட்டு பதிவுக்காக வழக்கு விசாரணையை மே 6ஆம் தேதி தள்ளிவைத்தார். மேலும், அன்றைய தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.